பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி; வரும் 8ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் - தி.மு.க அறிவிப்பு

கோப்புப்படம்
மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை,
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






