திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி எழுதிய "திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" புத்தகத்தை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆரியம் அஞ்சி நடுங்குகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது சமூக நீதி, சமத்துவ ஆட்சி; மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோக்கி செல்ல திராவிட இயக்கம்தான் காரணம்.

'திராவிடநல் திருநாடும்' என்ற சொன்னால் சிலரின் நாக்கு தீட்டாகி விடுமா? தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்பதை விட்டுவிட்டு சிலர் பாடுகின்றனர். திராவிடம் என்று பாடினால் சிலருக்கு எரியுமென்றால் மீண்டும் மீண்டும் பாடுவோம். திராவிடம் என்பது ஒருகாலத்தில் இடம், மொழி, இனத்தின் பெயராக இருந்தது.

அடிமை சிந்தனைகளை ஆட்சி, அதிகாரம், சட்டங்கள் மூலமாக உடைத்துள்ளோம். அடிமைகளை விட மோசமாக நடத்தப்பட்ட மக்களின் உரிமைகளைமீட்க திராவிடம் தோன்றியது. அநீதிகளுக்கு எதிராக கேள்வியெழுப்பி, போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது திராவிட இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக தொடங்கப்பட்டது தான் திராவிட இயக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story