சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது


சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது
x

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டினார்.

திருவள்ளூர்

கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையின் போது சிறுமியை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று கடத்திச்செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக, மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவல்கள் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 14 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர். சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காட்டினர். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் மனநலம் பாதித்தவரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story