தீபாவளி பண்டிகை: சென்னை சென்டிரல் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கம்


தீபாவளி பண்டிகை: சென்னை சென்டிரல் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 23 Oct 2024 2:14 AM GMT (Updated: 23 Oct 2024 3:36 AM GMT)

சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story