கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி


கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
x

கன்னியாகுமரியில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் இரணியல் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு ரெயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பிறகு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story