கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்


கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
x

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த 3 பேரும் கல்லூரி மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முற்புதர் அருகில் அரைகுறை ஆடையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியின் ஆண் நண்பரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.

1 More update

Next Story