சென்னை மழை: 7 மணி நிலவரப்படி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி


சென்னை மழை: 7 மணி நிலவரப்படி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி
x

சென்னையில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 79 மரங்கள் சாய்ந்தன. இந்த 79 மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் உள்ளன. தற்போது நிவாரண மையங்களில் எவரும் இல்லை 15.10.2024 முதல் இன்று (17.10.2024) இரவு 7 மணி வரை 15,50,535 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் நேற்று முதல் இன்று இரவு 7 மணி வரை 2,42,000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 539 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன இதில் 13,680 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது 15.10.2024 முதல் இன்று (17.10.2024) இரவு 7 மணி வரை 12,108 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story