இடையூறின்றி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்


இடையூறின்றி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
x

அசம்பாவிதம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை,

மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் (Storm Water Drain) பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மழைநீர் வடிகால் பணிக்காக மண் தோண்டப்பட்ட இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள் (Barricades) அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பணி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் மண் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான தடுப்புகள் இல்லாமல் (Barricades) இருந்தால் பெருநகர சென்னை மாநகராட்சியின் புகார் தொலைபேசி எண் 1913-ல் புகார் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story