திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x

சுரங்கப்பாதை பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627) நாளை (புதன்கிழமை) நெல்லை வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல் மறு மார்க்கமாக இயங்கும் திருவனந்தபுரம் - திருச்சி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22628) நாளை (புதன்கிழமை) நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு வரும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story