கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி

கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இன்று மாலை அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தவர்கள் மீது அரசு பஸ் மோதியது.
இந்த விபத்தில் சரத்குமார், ஹரிஷ், நாகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





