காதல் திருமணம் செய்த 3 மகன்கள்... மனஉளைச்சலில் தாய் எடுத்த விபரீத முடிவு


காதல் திருமணம் செய்த 3 மகன்கள்... மனஉளைச்சலில் தாய் எடுத்த விபரீத முடிவு
x

3 மகன்களும் காதல் திருமணம் செய்ததால் மனஉளைச்சலில் இருந்த தாய் விபரீத முடிவை எடுத்தார்.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ராஜாவூரை சேர்ந்தவர் மரிய ஆரோக்கியம், தொழிலாளி. இவருடைய மனைவி சகாய மலர் (வயது 52). இவர்களுக்கு 3 மகன்கள் உண்டு. இதில் 2 மகன்கள் ஏற்கனவே காதல் திருமணம் செய்தனர். அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனால் தனது 3-வது மகனுக்காவது பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஆசையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் 3-வது மகனும் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகாய மலர் மன உளைச்சலுக்கு ஆளானார்

இந்தநிலையில் சம்பவத்தன்று சகாய மலர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story