மதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்



மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
மதுரை,
மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.
ஆனால், மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக 2 விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.
இந்நிலையில், கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த 2 இண்டிகோ விமானங்களும் 1 மணிநேரத்திற்கு பின் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire