15 வயது சிறுமி கர்ப்பம்: வடமாநில வாலிபர் மீது போக்சோ வழக்கு


15 வயது சிறுமி கர்ப்பம்: வடமாநில வாலிபர் மீது போக்சோ வழக்கு
x

மருத்துவமனையில் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

திருப்பூர்,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ரோம்கம் (வயது20). இவர் திருப்பூர், வீரபாண்டி பல வஞ்சிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் திருப்பூர் பகுதியில் வசித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடம் பழகி வந்தார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமிக்கு திடீரென உடல்நலம் குன்றியது. தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரோம்கம்மை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story