ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை


ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை
x
தினத்தந்தி 11 Aug 2024 1:26 AM GMT (Updated: 11 Aug 2024 6:08 AM GMT)

ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தென்மத்திய ரெயில்வே சார்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை புதன்கிழமைகளில் செகந்திராபாதில் இருந்தும், மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

தற்போது பயணிகளின் வசதிக்காக வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும். அதன்படி, செகந்திராபாத்தில் இருந்து (வ.எண்.07695) இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் பகல் 11.20 மணிக்கு சென்னை வந்தடையும். இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில்் ராமநாதபுரத்தில் இருந்து (வ.எண்.07696) வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு புறப்படும் ரெயிலானது, இரவு 9.15 மணிக்கு தாம்பரமும், இரவு 10.10 மணிக்கு சென்னையும் சென்றடைகிறது. மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். தற்போது இந்த ரெயிலுக்கு பேராவூரணி ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில்களில், 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story