விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 19 Jun 2024 8:58 AM GMT (Updated: 19 Jun 2024 9:03 AM GMT)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் சூழலில், தி.மு.க. வேட்பாளராக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. செயலாளர்கள் உடன் இருந்தனர்.

இந்த நிலையில், பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை மெயின்ரோடு வழியாக தாலுகா அலுவலகம் வந்து தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.


Next Story