அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர பாலாஜி


அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 14 Aug 2024 12:51 PM GMT (Updated: 14 Aug 2024 12:54 PM GMT)

அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. கட்சியை வைத்துப் பிழைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை. எந்தக் கட்சியிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த மக்களவைத் தேர்தலில் மோடி வேண்டாம் என்று ஒரு அணியும், மோடி வேண்டும் என்று ஒரு அணியும் போட்டியிட்டது. அவர்களைத் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்; அதற்காக மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது.

தமிழக வெள்ளப் பாதிப்புக்கும், மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டே இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது 'கோ பேக் மோடி'என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்தபின் அமைதியாகி விட்டது. தேசப்பற்று உள்ளவர்கள் அதிமுகவினர். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story