மின்சார ரெயில்கள் ரத்து - கூடுதல் பஸ்கள் இயக்கம்


மின்சார ரெயில்கள் ரத்து - கூடுதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 22 July 2024 1:44 PM GMT (Updated: 22 July 2024 5:00 PM GMT)

பயணிகள் வசதிக்காக தாம்பரம் மார்க்கத்தில் நாளை முதல் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தாம்பரம் ரெயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஜூலை 23 முதல் ஆக. 14 வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பஸ்கள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக பெரிய பஸ்களை மா.போ.கழக இயக்க உள்ளது மற்றும் பல்லாவரம் ரெயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பஸ் நிலையத்திற்கு 5 மினி பஸ்கள் மற்றும் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திற்கு 5 மினி பஸ்கள் குறுகிய சேவையாக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாள்களில் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story