புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து



பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்புவனை காவல் நிலையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire