உத்தரபிரதேச சாலை விபத்தில் இருவர் பலி- 4 பேர் படுகாயம்


உத்தரபிரதேச சாலை விபத்தில் இருவர் பலி- 4 பேர் படுகாயம்
x

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி நகரில் இரண்டு பைக்கில் 6 இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த லாரி மீது இரண்டு பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த உமேஷ் யாதவ் (வயது 24), கரண் கண்ணோஜியா (28) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், சமர்ஜீத் (22), யாஷ் ராஜ் (20), ரஞ்சீத் (28) மற்றும் ராம் ஆதார் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story