இமாச்சல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது


இமாச்சல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2025 2:03 PM (Updated: 31 Jan 2025 2:04 PM)
t-max-icont-min-icon

போலீசார் நடத்திய சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிம்லா

இமாச்சல பிரதேசம், நூர்பூர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று மாத்தோலி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்திய சம்பா மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் தேகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story