துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்கரே


துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்கரே
x

துரோகிகளை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். நேற்று தனது இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:- டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் ஒருவர் எவ்வளவு ஓய்வெடுக்க முடியும்? துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை எனக்கு ஓய்வே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா உடைய காரணமாக இருந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று குறிப்பிடுவது வழக்கம்.


Next Story