உத்தரபிரதேசம்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


உத்தரபிரதேசம்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2025 10:16 AM IST (Updated: 14 Feb 2025 11:29 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு காரில் சிலர் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த கார் ஜரேரா கிராமத்திற்கு அருகே உள்ள கால்வாயில் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 2 .குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பப்லு (45), அவரது சகோதரரின் மனைவி பூனம் (35), பூனமின் மகள்கள் காவ்யா (3) மற்றும் பூமி (1) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story