குடும்ப தகராறில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் தற்கொலை


குடும்ப தகராறில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் தற்கொலை
x

குடும்ப தகராறில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.

கொல்லம்,

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டாரா பகுதியை சேர்ந்தவர் லூசியஸ் ஜெர்மியஸ் (வயது 32). இவர் புனலூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த லூசியஸ் ஜெர்மியஸ் மனைவியை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது மனைவி குண்டாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் லூசியஸ் ஜெர்மியஸ் மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த குண்டாரா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story