காஷ்மீர் தாக்குதல்: அசாம் பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி முர்மு


காஷ்மீர் தாக்குதல்: அசாம் பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி முர்மு
x

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி,

ஜனாதிபதி திரவுபதி 2 நாட்கள் பயணமாக நாளை அசாம் செல்லவிருந்தார். அவர் நாளை மறுதினம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். மேலும், மாநில அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப்பகுதியில் நேற்று மதியம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மேற்கொள்ளவிருந்த அசாம் பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும், அசாம் பயணம் தொடர்பாக மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story