உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி


உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
x

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சவானி கிராமத்தின் மோரி பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர், இந்த தீ விபத்தில் 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தீ விபத்தில் சவானி கிராமத்தை சேர்ந்த பிரம்மா தேவி என்ற 75 வயது மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பலியானார். இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story