மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு


மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
x

மத்திய பிரதேசத்தில் இன்று மதியம் 3.07 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 3.07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 24.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story