ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார்; 3 பேர் பலி

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை உயிருடன் மீட்டனர்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கரியனி கிராமத்தில் ஆற்றோரம் உள்ள சாலையில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 9 பேர் பயணித்தனர்.
அப்போது, கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் கார் அடித்து செல்லப்பட்டது. அந்த காரில் 9 பேரும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிராமத்தினர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






