கார்-பைக் மோதி விபத்து - 3 பேர் பலி


கார்-பைக் மோதி விபத்து - 3 பேர் பலி
x

கோப்புப்படம்

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் , பர்கேராவில் உள்ள பர்ராமவு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் பஹேடி பகுதியில் தனது மனைவி, இரண்டு வயது மகன் மற்றும் அவரது மைத்துனருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் அவர்களின் பைக் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே வினோத் குமார் மற்றும் சுனில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த வினோத் குமார் மனைவி ராக்கி மற்றும் அவரது 2 வயது மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story