ஈரோடு அருகே 500 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஈரோடு அருகே ஆம்னிபஸ்சில் தங்கம் கடத்தல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஈரோடு போலீசாருக்கு ஆம்னிபஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலையில் ஐதராபாத் - கோயம்புத்தூர் பேருந்தை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அதில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோயம்புத்தூர் சிங்காநல்லூரை சேர்ந்த புகஸ்வாசன் என்பவரின் பையில் தங்கம் பிஸ்கட் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் தங்கம் , வெளிநாட்டு பணம், மொபைல் போன், மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story