புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்
https://www.dailythanthi.com/News/India/9-girls-hospitalised-after-midday-meal-at-delhi-government-school-885668
புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள மாஹூர் பகுதியில், பக்தர்கள் சிலர் 'தாக்கூர் புவா' புனித யாத்திரை மேற்கொண்டிருந்தனர். இந்த புனித யாத்திரையின்போது நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், உணவு சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாஹுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அனைவரின் உடல்நலமும் தேறி வருவதாகவும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.