பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பஸ்; 3 பெண்கள் படுகாயம்


பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பஸ்; 3 பெண்கள் படுகாயம்
x

பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று கொடுங்களூருக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. மழை பெய்துகொண்டிருந்த நிலையில் செவ்வூர் பகுதியின் அஞ்சம்கல்லு பகுதியில் பஸ் வந்தது.

அங்குள்ள பஸ் நிழற்குடையில் பயணிகள் பஸ் ஏறுவதற்கு கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வேகமாக வந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story