ஓட்டலில் வாக்குவாதம்; 3 பேர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்


ஓட்டலில் வாக்குவாதம்; 3 பேர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

8 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் தாம்தரி மாவட்டம் பொய்னா பகுதியில் சாலையோர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு சாப்பிட வந்த 8 இளைஞர்கள், ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அந்த ஓட்டலுக்கு அலோக் சிங், நிதின் தன்டி, சுரேஷ் ஹியல் ஆகிய 3 இளைஞர்கள் உணவு சாப்பிட வந்துள்ளனர். உணவு சாப்பிட வந்த 3 இளைஞர்களுக்கும் ஓட்டலில் தகராறு செய்துகொண்டிருந்த 8 இளைஞர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபி திவான் என்ற இளைஞர் எதிர் தரப்பை சேர்ந்த 3 இளைஞர்களையும் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் அலோக் சிங், நிதின் தன்டி, சுரேஷ் ஹியல் ஆகிய 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோபி திவான் உள்பட 8 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1 More update

Next Story