கோவையில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: நவ.4ம் தேதி தொடங்குகிறது


கோவையில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: நவ.4ம் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Oct 2024 3:20 PM IST (Updated: 25 Oct 2024 3:37 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தை பொறுத்தவரை மண்டல வாரியாக ஆட்சேர்ப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படுகிறது.

சென்னை,

ராணுவத்தை பொறுத்தவரை மண்டல வாரியாக ஆட்சேர்ப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது கோவையில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வருகிற நவம்பர் 4 ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராணுவ வீரர்கள், சமையல் கலைஞர்கள், சலவை தொழிலாளி ,குமாஸ்தா உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணுவ வீரர்கள் பணிக்கு மட்டும் 174 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நடைபெறும் தேதி:

நவம்பர் 4-ம் தேதி தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு டையு டாமன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், நவம்பர் 5 ம் தேதி ஆந்திரா கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6-ம் தேதி ராஜஸ்தான், மராட்டியத்தை சேர்ந்தவர்களும் தேர்வில் பங்கேற்கலாம்.

நவம்பர் 7-ம் தேதி அரியலூர் செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம் நீலகிரி பெரம்பலூர் புதுக் கோட்டை ராணிபேட்டை தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

நவம்பர் 8-ம் தேதி கோவை, சென்னை, ஈரோடு, குமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை. திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கேரளாவை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நவம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story