அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (18.08.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 245 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 876 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 393 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 734 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 275 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 26 ஆயிரத்து 609 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 676 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
172 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 811 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 455 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 81 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






