திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூ.6 கோடி உண்டியல் காணிக்கை

அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று ஆடி மாத பவுர்ணமிக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் காலையில் தொடங்கி இரவு வரையில் நடைபெற்றது.
இதில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது உண்டியல் காணிக்கையாக 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி, ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550 ரொக்கம் பெறப்பட்டது.






