'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி


வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 25 Aug 2024 9:31 AM GMT (Updated: 25 Aug 2024 11:12 AM GMT)

'வாழை' திரைப்படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டினார்.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 23-ந் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் நடிகர் விஜய் சேதுபதி 'வாழை' படத்தினை பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி பேசியுள்ளார்.

அதாவது, 'வாழை' மிகவும் அற்புதமான திரைப்படம். படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். இந்த மாதிரியான படத்தினை இயக்கியதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தினை மக்கள் அனைவரும் திரையங்குகளில் சென்று பார்த்தால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும் என்று தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.


Next Story