ரீ-ரிலீஸில் வசூல் சாதனை படைத்த “பாகுபலி: தி எபிக்”


ரீ-ரிலீஸில் வசூல் சாதனை படைத்த “பாகுபலி: தி எபிக்”
x

ராஜமவுலியின் ‘பாகுபலி: தி எபிக்’ திரைப்படம் ரீ-ரிலீஸில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. அதன்படி இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக "பாகுபலி தி எபிக்" என்ற பெயரில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் மொத்தமாக 1,150-க்கும் அதிகமான திரைகளில் ‘பாகுபலி: தி எபிக்’ படம் வெளியானது.

இந்த நிலையில், ரீ- ரிலீஸ் ஆன ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரீ-ரிலீஸில் உலகளவில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை ‘பாகுபலி: தி எபிக்’ படைத்துள்ளது.

1 More update

Next Story