அமரன் படம் : காஷ்மீரில் படப்பிடிப்பின் போது சந்தித்த பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட படக்குழு


'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரும், டிரெய்லரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அமரன் படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பின் போது சந்தித்த பிரச்சினைகள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அங்குள்ள குளிர், சண்டை காட்சிகள் மற்றும் ராணுவ கதையை படமாக எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சினைகளை குறித்து பேசியுள்ளனர். பயங்கரவாதிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார்கள்.


Next Story