ஹவுரா பாலத்தின் முனை மற்றும் சந்திரகாச்சி ரெயில்... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி  போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
x
Daily Thanthi 2024-08-27 08:54:33.0

ஹவுரா பாலத்தின் முனை மற்றும் சந்திரகாச்சி ரெயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி முன்னேறினர். போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், சில பேரிகார்டுகளையும் தள்ளிவிட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது. 


Next Story