கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை


கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 26 Oct 2023 11:03 AM GMT (Updated: 26 Oct 2023 11:25 AM GMT)

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோகா,

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். இந்ததண்டனை குறித்து தகவல் அறிந்த இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. மேலும் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட வழிமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.


Next Story