வார ராசிபலன் 26.01.2025 முதல் 01.02.2025 வரை


வார ராசிபலன் 26.01.2025 முதல் 01.02.2025 வரை
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

சுறுசுறுப்பாக காரியத்தில் ஈடுபட்டு சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடிக்கும் திறன் பெற்ற மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் பழுதடைந்த மின்சாதனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் உள்ள பழுதுகளை தள்ளிப் போடாமல் உடனடியாக சரி செய்வது கிரக காரக ரீதியாக பல நன்மைகளை தரும்.

ரிஷபம்

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் மனதில் நிதானத்தோடு செயல்படும் தன்மை கொண்ட ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும். குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாக இருப்பதே நல்லது.

தொழில்துறையினர், வியாபாரிகள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்து கவனமாக திட்டமிடும் காலம் இது. வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அவர்களது மனம் மகிழும் வகையில் விருந்து படைத்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றால் பல நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

நண்பர்களுக்காக எந்தவித கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யும் மனப்பக்குவம் கொண்ட மிதுனம் ராசியினர், இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நல்லவிதமாக நிறைவேறும்.

தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு இது நல்ல லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி மற்றும் பணிவாய்ப்பு குறித்தும், எதிர்காலம் குறித்து திட்டமிடுவர். உடல் நிலையை பொறுத்தவரை பல்வேறு மனக்குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படும்.

வயதான பெண்களுக்கு அன்னதானம் அல்லது ஆடைதானம் இயன்றவரை செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

கடகம்

எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட காரியத்தில் இருந்து பின் வாங்காமல் செய்து முடிக்கும் திறமை படைத்த கடகம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப உறவுகளோடு எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அமைதியாக செல்ல வேண்டும்.

தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெல்வார்கள். உடல் நலனை பொறுத்தவரை முதுகு வலி, இடுப்பு வலி ஏற்பட்டு அகலும்.

கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு தீனி போடுவது அல்லது கோவில் பசு மாடுகளுக்கு அருகம்புல் தருவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

சிம்மம்

நேர்மைக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவேன், ஆனால் எதற்காகவும் நேர்மையை விட்டு தர மாட்டேன் என்ற எண்ணம் கொண்ட சிம்மம் ராசியினர், இந்த வாரம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் லாபம் அடைவார்கள். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான உறவு நீடிக்கும்.

தொழில் துறையினர், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றங்கள், லாபங்கள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புரியாத பாடங்களில் தெளிவு பெற வேண்டும். வண்டி வாகனம் ஓட்டுவதில் நிதானம் அவசியம். மன உளைச்சல் மற்றும் முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு விலகும்.

பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயார் ஆகியோருக்கு இந்த வாரம் இரு முறையாவது மலர்மாலை சமர்ப்பணம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி

மற்றவர்களைப் பற்றி சரியாக கணக்கிட்டு அதன்படி நடந்து கொள்ளும் நுட்பமான திறன் பெற்ற கன்னி ராசியினருக்கு இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். குடும்ப பொருளாதார நிலை முடக்கமாக இருந்தாலும் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் தங்கள் அனுபவங்கள் மூலம் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியூர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெல்வர். கை. கால்களில் வலி, குடைச்சல் ஏற்பட்டு விலகும்.

கோவில் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்கும் நபர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள் தானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம்

தனக்கு ஏற்படும் துன்பத்தை விட தான் விரும்பும் நபர்களுக்கு ஏற்படும் துன்பத்தால் அதிக மனக் கஷ்டத்தை அடையும் துலாம் ராசியினர் இந்த வாரம் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். குடும்ப பொருளாதாரம் நிலை மேம்படும். ஒரு சிலர் வேறு வீட்டிற்கு குடியேறுவார்கள்.

தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நுட்பமாக செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்துவதுடன், இருசக்கர வாகனங்களில் மெதுவாக செல்ல வேண்டும். உடல் நலனைப் பொறுத்தவரை அலைச்சல் காரணமாக மன உளைச்சல் ஏற்படும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் தானமாக வழங்குவதும், முடிந்தால் அவர்களுக்கு ஆடை தானம் செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

மனதில் உள்ள கடவுள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்காமல் கடவுள் அனைவருக்கும் பொது என்ற கருத்தைக் கொண்ட விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை நிலவும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் சிறப்பான வளர்ச்சி பெறுவதுடன் சமூக மதிப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பரிசு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல், பிரஷர் ஏற்பட்டு விலகும்.

அம்மன் கோவில்களில் அன்னதானத்தில் பங்கேற்பதாலும், கோவிலை சுத்தம் செய்யும் கைங்கரியம் செய்வதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.

தனுசு

எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக சிந்தித்து அதன் பின்பு காரியத்தில் இறங்கி வெற்றி பெறும் இயல்பு கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய ஊர்களில் கிளை தொடங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையாக செயல்பட்டு தேர்வுகளிலும், விளையாட்டிலும் பரிசுகளை பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை கை, கால் வலி, அசதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும்.

நாய்களுக்கு இரவில் உணவு அளிப்பதும் முடிந்தால் குரங்கு அல்லது காளை மாட்டுக்கு வாழைப்பழங்கள் அளிப்பதும் பல்வேறு நன்மைகளை பெற்றுத் தரும்.

மகரம்

ஒரு நல்ல விஷயத்தை செய்வதன் மூலம் தனக்கு ஆதாயம் இல்லாவிட்டாலும் அதை செய்து முடிக்கும் பக்குவம் பெற்ற மகரம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான அன்னியோன்யம் ஏற்படும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் பல நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய ஊர்களுக்கு சுற்றுலா செல்வார்கள். தலைசுற்றல், முதுகு வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கோவிலுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவதும், மாணவியர்களுக்கு பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கும்பம்

மகிழ்ச்சி என்பதும் குறுகிய காலம் அதே போன்று துன்பம் என்பதும் குறுகிய காலம் என்ற உண்மையை உணர்ந்த கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று இனிமையான சூழ்நிலை உருவாகும்.

தொழில் துறையினர், வியாபாரிகள் கொள்முதலில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியரிடம் அடிக்கடி ஆலோசனை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் நலத்தை பொறுத்தவரை அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அசதி ஏற்பட்டு விலகும்.

கும்ப ராசியினர் இந்த வாரம் முடிந்த வரை மவுன விரதம் இருப்பதும், உண்ணா நோன்பு இருப்பதும் பல்வேறு நன்மைகளை பெற்றுத் தரும்.

மீனம்

காரியத்தில் இறங்கும் வரை பல யோசனைகளை மனதில் கொண்டிருந்தாலும், காரியத்தில் இறங்கிய பின்னர் தீர்மானமாக செயல்பட்டு வெற்றி பெறும் மீனம் ராசியினர் இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல விஷயங்கள் நடந்தேறும்.

தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு கடந்த கால தொழில் பிரச்சினைகள் விலகி லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டு என்று இருந்தாலும் பாடத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட்டு விலகும்.

அரச மரத்தடி பிள்ளையாருக்கு முடிந்த போதெல்லாம் மஞ்சள் கலந்த நீரில் அபிஷேகம் செய்து பூச்சூடி வழிபட்டு வந்தால் பல நன்மைகள் ஏற்படும்.




Next Story