உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தான் அணி இந்த மோசமான நிலையை சந்திக்க இதுதான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் கருத்து

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

Update: 2023-11-14 03:08 GMT

Image Courtesy: AFP

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் வெளியேறியது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது மிகவும் மென்மையான வீரர்களாக மாறிவிட்டார்கள். முன்பெல்லாம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு களத்தில் அனல் பறக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது உள்ள அணியில் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் போன்றவர்கள் எல்லாம் அந்த நிலையை மாற்றி விட்டார்கள். அவர்கள் மிகவும் நட்பான வீரர்களாக சாதாரண கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறார்கள். அதுவே அந்த அணியின் சொதப்பலுக்கு காரணம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்