ரோகித், கில் அல்ல... இந்த வீரர்தான் பெரிய சதங்கள் அடிக்க போகிறார் - பாகிஸ்தான் முன்னாள் வீரர்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-09-10 02:06 GMT

image courtesy: twitter/@BCCI

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மட்டும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித், ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் வங்காளதேச டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, சுப்மன் கில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காட்டிலும் விராட் கோலிதான் பெரிய சதங்கள் அடிக்க போகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூ டியூப் சேனலில் அவர் கூறியதாவது,

இங்கிலாந்து தொடரில் (டெஸ்ட்) விராட் இடம் பெறவில்லை. இலங்கை தொடரில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் எதிர்வரும் வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து தொடர்களில், பெரிய சதங்களை விராட் அடிப்பார். அதை நீங்கள் காண்பீர்கள். 110 அல்லது 115 அல்ல, அவரிடமிருந்து 200 ரன்களை நீங்கள் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வங்காளதேசத்திற்கு எதிரான தொடர் நிறைவடைந்ததும், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்