நன்மைகள் அருளும் நரசிம்மர்.. முக்கிய தகவல்கள்

நரசிம்ம மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம், கஷ்டங்கள் நீங்கும்.

Update: 2024-08-19 11:34 GMT

நரசிம்மர் 74- க்கும் அதிகமான ரூபங்களில் அருளக் கூடியவர். இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்களாகும்.

இவற்றில் யோக நரசிம்மர் யோக நிலையிலும், லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது மடியில் அமர வைத்த நிலையிலும் மட்டுமே சாந்த சொரூபமாக காட்சி அளிப்பார். மற்ற அனைத்திலும் உக்கிர வடிவமாகவே நரசிம்மர் காட்சி தருகிறார்.

பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே தினசரி பூஜை செய்ய நியமிக்கப்படுகிறார்கள். ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவில்களில் மட்டும் இந்த விதி கிடையாது.

எண்ணற்ற நரசிம்ம மந்திரங்கள் உள்ளன. இவற்றை எவர் ஒருவர் பயபக்தி, விடாமுயற்சி, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பாராயணம் செய்கிறாரோ அந்த பக்தருக்கு பயத்தை நீக்கி, சகல நன்மைகளையும் நரசிம்மர் அருள்வார். நரசிம்ம மந்திரத்தை ஜபிக்க தொடங்குபவர்கள் வியாழக்கிழமையில், நரசிம்மர் முன் நெய் விளக்கேற்றி வைத்து, மஞ்சள் ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்ய தொடங்க வேண்டும்.

நரசிம்ம மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம், கஷ்டங்கள் நீங்கும். எந்த சூழலிலும் மன அமைதியை இழக்க மாட்டார்கள். துன்பங்களும், கஷ்டங்களும் அவர்களை நெருங்காது. மாறாக அமைதி, செல்வ வளம், நிம்மதி ஆகியவை கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்