வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

வடக்கன்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-14 19:33 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்த பழவூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் அஜித் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலையில் பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனிக்கு சென்றார்.

அப்போது, அஜித் வழக்கம் போல் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அரிவாளால் அஜித்தை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அஜித்தின் கைகள் வெட்டப்பட்டு தொங்கியவாறு கிடந்தது. பின்னர் அங்கிருந்து கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து பழவூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்ேகாவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வடக்கன்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags:    

மேலும் செய்திகள்