யோகா விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

யோகா விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடந்தது.

Update: 2022-06-03 18:41 GMT

இளையான்குடி, 

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஆரோக்கியத்திற்கு வழி காட்டுவது யோகா பயிற்சியா? உடற்பயிற்சியா? என்னும் தலைப்பில் யோகா விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடை பெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். 72 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர்முகமது, அப்ரோஸ் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்