விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-10-03 13:42 GMT

கோப்புப்படம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் ஏரியில் இருந்து 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

3 சிறுவர்களும் மனம்பூண்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏரியில் மீன் பிடிக்க வந்த சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்