அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது.

Update: 2024-10-03 17:19 GMT

சென்னை,

லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு கழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்