செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பதட்டமான பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
* எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தி இருக்கிறார்.
* ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
* ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது என்று தலைமறைவாக இருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் போலே பாபா வீடியோ வெளியிட்டு உள்ளார்.
* சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி நாளை சென்னை வருகிறார்.
* தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு மனுவை 10 -ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
* 2 நாள் பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளா சென்றடைந்தார்.
* தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவரை கத்தியால் குத்தியவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
* டி.என்.பி.எல்: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதுகின்றன.
* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது .
* விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்