செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-06-30 11:56 GMT

சென்னை,

* டி20 உலகக்கோப்பை தொடரில் 17 ஆண்டுகள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

* பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி

* ஒவ்வொருவரும் தங்களது தாயாரின் பெயரில் மரக்கன்று நட வேண்டும் என பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

* ரஷியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து- 5 பேர் பலியாகினர்.

* சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

* தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.

* திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

* விக்கிரவாண்டியில் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்